விபத்தில் இறந்து போன மதுரை இ.எம்.டி. சரவணன் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சத்தை ஜி.வி.கே. நிர்வாகம் உடனடியாக தர வேண்டும். திரு.சரவனணன் அவர்கள் இந்த பணியை சேவை நோக்கத்தோடோ செய்து வந்தார். அவரின் இழப்பு என்பது பணத்தால் ஈடு செய்ய கூடியது அல்ல . இருந்த போதும் அவரின் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு ஜி.வி.கே. நிர்வாகம் உடனடியாக இந்த இழப்பீட்டுத் தொகையை கொடுக்க வேண்டும்.இதற்காக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது.
(108AWU)Reg.No.1508/MDU, Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Friday, 20 July 2012
Wednesday, 18 July 2012
மதுரை சரவணன் இ.எம்.டி. விபத்தால் மரணம் அடைந்தார்.
108 ஆம்புலன்சில் மதுரை கொட்டாம்பட்டி லோக்கேசனில் இ.எம்.டி.யாக வேலை பார்த்து வந்த திரு. சரவனணன் அவர்கள் இன்று அதிகாலை (19 . 07 . 2012 ) 4 . 30 மணிக்கு பணி நிமித்தமாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே கவனக்குறைவாக வந்த லாரி மோதி அகால மரணம் அடைந்தார். திறமையான பணியாளரான திரு . சரவனணன் அவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. அவரது குடும்பத்தினர் மேலூரில் வசிக்கின்றனர். சரவனணன் குடும்பத்தினரும், தமிழகம் முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் அவரது இழப்பால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் ( ஜி.வி.கே.) உடனடியாக தலையிட்டு அவரது குடும்பத்திற்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை அவரது இழப்பால் வாட்டும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது.
Friday, 13 July 2012
குவியும் குற்றச்சாட்டு குளறுபடியில் 108 - குமுதம் ரிப்போர்ட்டர்
அவசர காலத்தில் உயிரைக் காக்கும் '108 ' ஆம்புலன்ஸ் சேவையே கொஞ்சம் கொஞ்சமாக மரணப் படுக்கைக்குப் போகும் நிலையை என்னவென்று சொல்வது ?
மேலும் படிக்க
மேலும் படிக்க
Friday, 8 June 2012
20 நாள்களுக்குள் 108 ஆம்புலன்சில் உள்ள பழுதுகளை நீக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
108 ஆம்புலன்ஸ் வண்டியில் பராமரிக்கவேண்டிய அத்தியாவசியமான உயிர் காக்கும் உபகரணங்கள் உட்பட வண்டிக்கு ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்யும்படி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பலமுறை கோரிக்கைகள் வைத்தபோதும் போதும் ஜி.வி.கே.நிர்வாகம் எதையும் முழுவதுமாக சரிசெய்து தருவதில்லை. அதனால் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு ஆம்புலன்சில் உள்ள குறைகளை கோரிக்கை மனுவாக 30 . 05 . 2012 அன்று அளித்தோம்.மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆம்புலன்சில் உள்ள குறைகளை அறிய தனி கமிட்டி
போடப்பட்டு ஒவ்வொரு ஆம்புலன்சாக சென்று அந்த கமிட்டி ஆம்புலன்சில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தது.
Tuesday, 5 June 2012
‘108' ambulance employees stage stir on 30.05.2012- the Hindu
AGITATION:‘108' ambulance staff staging a demonstration in Madurai.— Photo: S. James.
The members of 108 Ambulance Thozhilalar Sangam staged a demonstration near Collector's office here on Wednesday.
The agitators demanded enhancement of basic infrastructural facilities in the vehicles and also ensure welfare of all the staffs – particularly, those handling the emergency vehicles round-the-clock.
There were aplenty of anomaly in pay structure, they claimed and hence demanded uniform scale.
Saturday, 2 June 2012
மதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜி.வி.கே வின் அடக்குமுறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
108 ஆம்புலன்ஸ் திட்டம் முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது, ஆம்புலன்ஸ் வாங்குவது, ஊழியர்களின் சம்பளம், வண்டிக்கு ஆகும் பிற செலவுகள் அனைத்துமே அரசே வழங்குகிறது. ஜி.வி.கே. நிறுவனம் வெறுமனமே அரசின் பணத்தை பெற்று அதை நிர்வாகம் செய்யும் பணியை மட்டும் செய்கிறது. இவ்வாறு செயல்படும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு தரும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே ஊழியர்களுக்கு வழங்கிவருகிறது ஜி.வி.கே.நிர்வாகம் .
Tuesday, 15 May 2012
Life savings Equipment in 108ambulances Dead : The New Indian Express
Oxygen cylinders, pulse oximeters not working , allege workers members
of the 108 ambulance workers union allege that the ambulances and the emergency
equipment provided in them are not being maintained properly by the local administration
of the GVK Emergency Management and Research Institute (EMRI).
Subscribe to:
Posts (Atom)



