Sunday, 29 December 2013

Saturday, 28 December 2013

வேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் போராட்டத்தை ஆதரிப்போம்



108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் நியாயமான கோரிக்கைகளுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தாரீர்!



108 ஆம்புலன்ஸ் பைலட், இஎம்டி, கால்சென்டர் ஊழியர்களின் வேலைநிறுத்தக் கோரிக்கைகள்

கோரிக்கைகள் தொடர்பாக நமது மாநிலச் சங்கத்தின் சார்பாக தொழிலாளர் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொழிற்தாவாவின் நகல்:

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வருகின்ற 2014 ஜனவரி 8 ஆம் தேதி இரவு எட்டு மணி முதல் ஜனவரி 9 ஆம் தேதி இரவு எட்டு மணி வரை மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

இது தொடர்பாக மாநிலச் சங்கம் கடந்த 24.12.2013 அன்று மதுரை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை

Saturday, 21 December 2013

DMS அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

கடந்த 18.12.2013அன்று ,

சென்னை தேனாம்பேட்டை DMS அலுவலகத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பர்கபட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

தொழிலாளர் துணை ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் HR இராமச்சந்திரன் கலந்து கொண்டு மேலும் ஒரு வாய்தா கேட்க சங்கநிர்வாகிகளும் உழியர்களும் கொதிதெழுந்தனர்.

தோழர்களே நமது நியாமான கோரிக்கைகளை பரிசீலிக்க கூட தயாராக இல்லாத இந்த ஜி.வி.கே நிறுவனத்தை எதித்து நமது உரிமைகளை மீட்டுக்க நேரடி நடவடிக்கைக்கு தயாராவோம்.

வாருங்கள் தோழர்களே ஒன்றுபடுவோம் ......

களம் காண்போம் .......


வென்றெடுப்போம்........

வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நாமக்கல்லில்

கடந்த11.12.2013 அன்று,

நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டத்தில் வரும்18.12.2013 அன்று நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மாநில அளவிலான வேலைநிறுத்தத்திற்குமுழு அதரவு தருவதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இ.எஸ்.ஐ முலமாக இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை செய்வது சம்பந்தமான விளக்கம் அளிக்க வாசன் கண் மருத்துவமனயிலிருந்து நிர்வாகிகளை வரவழைத்து உழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இறுதியாக கடந்த மாதம் நடந்த விபத்தை காரணம் காட்டி மாவட்ட துணை தலைவர் சத்தியமூர்த்திக்கு15 நாட்களாக பணி வழங்கப்படாமல் உதியத்தில் ரூபாய்5000 பிடிக்கப்பட்டது.அதனால் அவருக்கு மாவட்ட சங்கத்திலிருந்து உதவித்தொகையாக ரூபாய்5000 வழங்கப்பட்டது.