Friday, 23 December 2011

உயிரை கொடுத்து உழைக்கும் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் ஜி.வி.கே.


தேசிய நெடுஞ்சலைகள் திறக்கப்பட்ட பின்பு வாகனங்கள்  கட்டுப்பாடு  இல்லாமல் வேகாமாக  பயணிக்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகளும் அதிகமாகி விட்டன. விபத்துகளில் அடிபட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை  அளிக்கப்படுமானால் அவர்களின் பொன்னான உயிர்கள் காக்கப்படும். அந்த அரும்பணியில் மலையிலும், வெயிலினிலும் , கடும் குளிரிலும் கடமை தவறாமல் பணிபுரிபவர்கள் நமது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள். அவர்களுக்கு வழங்கப்படுவது மிக குறைந்த ஊதியமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் பணியினை தொடர்வதற்கு சிறப்பு காரணம் என்னவென்றால் அவர்கள் செய்யும் உயிர் காக்கும் பணி தரும் நிறைவு தான். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இவ்வாறு மிகுந்த கடமை உணர்வோடும், சிரத்தையோடும், தங்களது கடுமையான உழைப்பை செலுத்தி நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உழைக்கின்றனர். அந்த பலன்களை அறுவடை செய்யும் இந்திய அரசியல் அமைப்பை மதிக்காமல் செயல்பட்டு வரும் ஜி.வி.கே என்ற ஆந்திர நிறுவனத்திற்கு மனசாட்சி என்பது ஒரு துளியும் கிடையாது. 

Tuesday, 20 December 2011

HC notice to probe 108 ambulance service


 The Madurai bench of the Madras high court has ordered notice to the authorities on a plea to order an enquiry into alleged irregularities in the 108 ambulances service scheme. The bench comprising Justice K N Basha and Justice M Venugopal gave the directive to the principal secretaries of Health and Family Welfare, Transport and Home departments on a petition filed by one A Jeyaprakash Narayanasamy of Thoothukudi.

108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு : விசாரிக்ககோரி வழக்கு தலைமை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்டு உத்தரவு


108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் தலைமை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  

800 கோடி இழப்பீடு 
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அனைத்து ஆம்புலன்ஸ் வேன்களையும் மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால் இந்த சேவைக்கான காண்ட்ராக்டு ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராமலிங்க ராஜு (தற்போது ஜி.வி.கே ) என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் மற்ற ஆம்புலன்சையும் சேர்க்கும் போது கான்ட்ராக்ட்டு அளிக்கப்பட்டுள்ள நபருக்கு வருமானம் குறைந்து விடும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய வருகிறது . 

Monday, 21 November 2011

Collector hears grievances of '108' ambulance workers


Members of the ‘108' ambulance workers' union (Tamil Nadu) submitted a memorandum to Collector U. Sagayam here on Thursday.
In their petition, a delegation of the forum listed out a number of grievances and urged the Collector to intervene and redress them. Of the 13 ambulance vans in Madurai, vital parts and gadgets such as tyres, wheelchair, siren, horn, battery, oxygen cylinder, air-conditioner unit among others required periodical maintenance in many. Despite repeated pleas to the authorities, they had not been carried out, posing severe hardship to the employees in discharging their duties.

கோவை மாவட்டத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை திருப்ப பணியமர்த்த வேண்டும்

நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்தும் ,  தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும்  கோரிய கோவை மாவட்டத்தை சேர்ந்த  பத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், தொழிலாளர் நல சட்டங்களுக்கு விரோதமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்  . நிர்வாகம் தொடர்ச்சியாக தொழிலாளர் மீது பழிவாங்கும் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. 

Saturday, 19 November 2011

இலவச பஸ் பாஸ் உடனே தர வேண்டும்

தமிழக அரசு பஸ் கட்டணம், பால், மற்றும் மின்சாரக்  கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளது.ஏற்கனவே குறைவான சம்பளம் வாங்கி கொண்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.ஜி.வி.கே.நிர்வாகம் அது ஒப்புக்கொண்டபடி சொந்த ஊரில் வேலை கொடுக்காமல் , அனைத்து ஊழியர்களுக்கும் சொந்த ஊரில் இருந்து சுமார் 80  கிலோ மீட்டர் தள்ளியே ஒவ்வொருவரும் சென்று வேலை பார்த்து திரும்பி வரும்படி கொடுமைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாங்கும் சம்பளம் முழுவதும் பஸ் டிக்கட்டுக்கே சரியாக இருக்குமானால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எப்படி குடும்பம் நடத்துவது?.

Friday, 14 October 2011

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட உரிமை வேண்டும்

அக்டோபர் 17  மற்றும் 18  ஆகிய இரு தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு மற்றும் தனியார் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கு தபால் ஒட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு இது போல எந்த மாற்று ஏற்பாடும் செய்து தரப்படவில்லை. ஓட்டு போடுவது என்பது நாம் அனைவருக்கும் அரசியலமைப்பின் படியான உரிமை ஆகும். ஆனால் ஜி.வி.கே. நிர்வாகமோ இது போன்ற எந்த மாற்று ஏற்பாடுகளையும் செய்து தராமல்  தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகளை தட்டிக்கழிக்கிறது. அரசு உடனே தலையிட்டு 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.