Thursday 15 March 2012

பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும்


இதுவரை வருடாந்திர சம்பள உயர்வு வழங்கும்; போது சிலருக்கு கூடுதலாகவும் சிலருக்கு குறைவாகவும் உயர்த்தப்படுகிறது வழக்கமாக இருந்து வருகிறது. பல சமயங்களில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவருக்கு கூடுதலாகவும் பணி மூப்பு உள்ளவருக்கு குறைவாகவும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காரணம் கேட்ட போது வேலைச் செயல்பாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் (Performance) சம்பள உயர்வு வழங்கப்படுவதால் இவ்வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் தங்களின் வேலைச் செயல்பாடு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது, என்றோ  ஏன் குறைவாக சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றோ  அவரின்  எந்தச் செயல்பாடு குறைபாடுடையது. அவற்றைப் போக்க அவர் என்ன செய்ய வேண்டும் என்றோ, எந்த ஊழியருக்கும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை.

Friday 9 March 2012

முதல்வரிடம் 108 ஆம்புலன்ஸ் சங்கம் சார்ப்பாக கோரிக்கை மனு அளிப்பு



அனுப்புநர்

            “108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு”
            கதவு எண்.21, நேதாஷி மெயின் ரோடு, முல்லை நகர்,
            மதுரை – 625002.

பெறுநர்

1.         உயர்திரு. சீப் ஆப்ரேடிங் ஆபிசர் (COO) அவர்கள்
G.V.K.இஎம்ஆர் ஐ 108 ஆம்புலன்ஸ் சேவை.

2.         உயர்திரு. திட்ட இயக்குனர் அவர்கள்,
சென்னை.

           
            பொருள் :       இஎம்டி , கால் சென்டர் ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்துடன்
பஞ்சப்படியும் சேர்த்து வழங்கவும் - சம்பள உயர்வும் உயர்த்தப்படும் சம்பளம் பணிமூப்பின் அடிப்படையில் உயர்த்தபடவும் - பேருந்து கட்டணத்திற்கு பஸ்பாஸ் வழங்கவும் - கோருதல் சம்பந்தமாக.