Saturday 28 July 2012

தேனி மாவட்டத்தில் ஜே.டி. ஆய்வு! ஓடுவதற்கு தகுதி இல்லாத கம்பம் வண்டியை சரிசெய்ய உத்தரவு

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்(108AWU) சங்கம் சார்பாக ஆம்புலன்ஸ் வண்டிகள் சரிவர பரமரிக்கப்படுவதில்லை என்று மனு அளிக்கப்படிருந்தது. அதனை அடுத்து ஜே.டி. நேரில் ஆய்வு மேற்கொண்டார், அப்போது 4 டயர்களும் தேய்ந்து போய் ஓடுவதற்கு தகுதியே இல்லாமல் இருந்த கம்பம் வண்டியை அந்த வண்டி சரிசெய்யும் வரை ஓட்டக்கூடாது என்று உத்தரவிட்டார். அதனை அடுத்து அந்த வண்டி நிர்வாகத்தால் சரி செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆம்புலன்சிற்கும் 30 லட்சம் வரை ஆண்டுக்கு பராமரிப்பு செலவு ஆகிறது என்று கணக்கு எழுதும் ஜி.வி.கே. ஆம்புலன்ஸ் வண்டிகளில் டயர்களைக் கூட மாற்றுவதில்லை என்பது தான் நடைமுறை உண்மை. இதை அரசின் கவனத்திற்கு அனைத்து வழிகளில் நமது சங்கம் கொண்டு சென்று தான் இருக்கிறது. 

No comments:

Post a Comment