108 ஆம்புலன்சில் மதுரை கொட்டாம்பட்டி லோக்கேசனில் இ.எம்.டி.யாக வேலை பார்த்து வந்த திரு. சரவனணன் அவர்கள் இன்று அதிகாலை (19 . 07 . 2012 ) 4 . 30 மணிக்கு பணி நிமித்தமாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே கவனக்குறைவாக வந்த லாரி மோதி அகால மரணம் அடைந்தார். திறமையான பணியாளரான திரு . சரவனணன் அவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. அவரது குடும்பத்தினர் மேலூரில் வசிக்கின்றனர். சரவனணன் குடும்பத்தினரும், தமிழகம் முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் அவரது இழப்பால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் ( ஜி.வி.கே.) உடனடியாக தலையிட்டு அவரது குடும்பத்திற்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை அவரது இழப்பால் வாட்டும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment