Friday 14 October 2011

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட உரிமை வேண்டும்

அக்டோபர் 17  மற்றும் 18  ஆகிய இரு தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு மற்றும் தனியார் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கு தபால் ஒட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு இது போல எந்த மாற்று ஏற்பாடும் செய்து தரப்படவில்லை. ஓட்டு போடுவது என்பது நாம் அனைவருக்கும் அரசியலமைப்பின் படியான உரிமை ஆகும். ஆனால் ஜி.வி.கே. நிர்வாகமோ இது போன்ற எந்த மாற்று ஏற்பாடுகளையும் செய்து தராமல்  தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகளை தட்டிக்கழிக்கிறது. அரசு உடனே தலையிட்டு 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

No comments:

Post a Comment