தனியார் பராமரிப்பில் உள்ள "108' ஆம்புலன்ஸ் சேவையை அரசு ஏற்க வலியுறுத்தி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்ட ஊழியர்கள், நேற்று மதுரை காளவாசலில் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாநில அமைப்பு செயலாளர் ஆனந்தஜெயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் , தலைவர் , மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அரசு சம்பளம், சலுகைகள் வழங்க வேண்டும். கன்னியாகுமரியில் 14 ஊழியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகள் தன்னிச்சையாக, உள்நோக்கத்துடன் கூடிய உத்தரவுகளை வழங்கக்கூடாது. 15 மணி நேர வேலையை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும். கூடுதல் நேரம் பணி செய்தால், அதற்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றினால் இரண்டு நாள் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சில ஊழியர்கள், ஆம்புலன்சில் பணிபுரிந்தவாறு உண்ணாவிரதம் இருந்தனர்.
மாநில அமைப்பு செயலாளர் ஆனந்தஜெயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் , தலைவர் , மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அரசு சம்பளம், சலுகைகள் வழங்க வேண்டும். கன்னியாகுமரியில் 14 ஊழியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகள் தன்னிச்சையாக, உள்நோக்கத்துடன் கூடிய உத்தரவுகளை வழங்கக்கூடாது. 15 மணி நேர வேலையை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும். கூடுதல் நேரம் பணி செய்தால், அதற்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றினால் இரண்டு நாள் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சில ஊழியர்கள், ஆம்புலன்சில் பணிபுரிந்தவாறு உண்ணாவிரதம் இருந்தனர்.
No comments:
Post a Comment