Saturday 27 July 2013

சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 26.07.2013 அன்று 2 மணி முதல் 3 மணி வரை நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் அமைப்பு செயலாளர்கள் தோழர்.சிவக்குமார் , பால் கண்ணன் , பொது செயலாளர் செந்தில் உட்பட திரளான 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். தோழர் கருப்பன் சித்தார்த்தன் சிறப்புரையாற்றினார். ஆந்திர , கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் ஸ்ட்ரைக்கிற்கு ஆதரவு தெரிவித்தும் , ஊழியர்களை பழிவாங்கும் நிர்வாகத்தை கண்டித்தும் கோசங்கள் எழுப்பட்டன. பேச்சு வார்த்தை தோழ்வி அடைந்தால் ஸ்ட்ரைக்கில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment