Wednesday 27 July 2011

விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டும் விழுப்புரம் டி. ம். மற்றும் பிளிட் - ஐ கண்டிக்கிறோம் .

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 18 .07 .2011 அன்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தனர். அன்று பத்திரிக்கைகளுக்கும் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் மனு அளித்த விவரம் அடுத்த நாள் பத்திரிக்கைகளிலும், 27 .07 .2011 தேதியிட்ட தமிழாக அரசியல் வார இதழிலும் வெளிவந்தது. விழுப்புரம் மாவட்ட டி. ம் . மற்றும் பிளிட் இருவரும் விழுப்புரம் மாவட்ட 108 தொழிலாளர்களை பேட்டி அளித்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதி தருமாறு மிரட்டுகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் தங்கள் படும் கஷ்டங்களை வெளிப்படையாக சொல்லக்கூட உரிமை இல்லையா என்பது இங்கு மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஊழியர்களை மிரட்டும் டி.ம். மற்றும் , பிளிட் இருவருக்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment