13.07.2011,கோவையில் தாசில்தார், அர்.எம்., ஜேடி,மற்றும்
நமது 108 ஆம்புலன்ஸ் சங்க தொழிலாளர்கள்
பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனம் தொழிலாளர்களுக்கு இழைத்துவரும் பல்வேறு இன்னல்களை நமது சங்கத்தினர் எடுத்துவைத்தனர். அத்தோடு தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப். மற்றும் இஎஸ்ஐ, முறையாக செலுத்தப்படுவதில்லை,சட்டப்படி 8 மணி நேரம் வேலை நேரமாக்கப்பட வேண்டும், கூடுதல் நேரத்திற்கு ஒடி தருதல் தொழிலாளர்களுக்கு சொந்த ஊரில் வேலை என்ற பல்வேறு கோரிக்கைகைகளை வைத்தனர். தாசில்தார் தொழிலாளர்கள் கேட்பது அனைத்துமே நியாயமான கோரிக்கைகள் என்று கூறினார். நிர்வாகம் இன்னும் 15 நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது. தொடர்ந்து போராடுவோம். சட்டபடியான நமது உரிமைகளை அடைவோம்.
No comments:
Post a Comment