நாமக்கல்லில் வெற்றிகரமாக நடைபெற்ற எழுச்சிமிகு தர்ணாப் போராட்டம்
கடந்த 27.12.2013 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆதரவு தர்ணாப் போராட்டத்தை நமது சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர் வி.வரதராஜ் துவக்கிவைத்தார். மாநில அமைப்புச்செயலாளர் தோழர் பால்கண்ணன், மாநிலப் பொருளாளர் தோழர் சரவணன், கோவைமண்டலப் பொருப்பாளர் தோழர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலரும் உரையாற்றினர். எழுச்சிமிகு முழக்கங்கள் முழக்கப்பட்டன.
போராட்டத்தில் கோவைமண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் பைலட், இஎம்டிக்கள் 200 க்கும் மேற்பட்டோர் உணர்வுப்பூர்வமாகக் கலந்து கொண்டனர்.மண்டலத்தில் பணியில் இருப்பவர்களைத்தவிர ஓய்வில் இருப்பவர்கள் அனைவரும் தொலைவையும் பொருட்படுத்தாமல் மிகுந்த உணர்ச்சியுடன் கலந்து கொண்டு வீரமுழக்கமிட்டனர். அவர்களது முழக்கங்களில் இதுநாள் வரை தங்களை கட்டிப்போட்டிருந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெரிய வேண்டும் என்ற வீராவேசம் தெரிந்தது. முடிவில் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் த.சிவக்குமார் தர்ணாப் போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.
No comments:
Post a Comment