Saturday 21 December 2013

வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் நாமக்கல்லில்

கடந்த11.12.2013 அன்று,

நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டத்தில் வரும்18.12.2013 அன்று நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மாநில அளவிலான வேலைநிறுத்தத்திற்குமுழு அதரவு தருவதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இ.எஸ்.ஐ முலமாக இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை செய்வது சம்பந்தமான விளக்கம் அளிக்க வாசன் கண் மருத்துவமனயிலிருந்து நிர்வாகிகளை வரவழைத்து உழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இறுதியாக கடந்த மாதம் நடந்த விபத்தை காரணம் காட்டி மாவட்ட துணை தலைவர் சத்தியமூர்த்திக்கு15 நாட்களாக பணி வழங்கப்படாமல் உதியத்தில் ரூபாய்5000 பிடிக்கப்பட்டது.அதனால் அவருக்கு மாவட்ட சங்கத்திலிருந்து உதவித்தொகையாக ரூபாய்5000 வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment