புளியந்தோப்பு நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, பிரசவமான பெண் ஒருவரை
அவசர சிகிச்சைக்கு ஏற்றி சென்ற 108 ஆம்புலன்சின் ‘டயர்’ வெடித்ததால், கடும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுனரின் சாதுர்யத்தால் விபத்து தடுக்கப்பட்டது. இந்த விபத்திற்கு, ஆம்புலன்ஸ் வாகனங்களின் பராமரிப்பு குறைவே காரணம் என, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்பட்டது.
அவசர சிகிச்சை தேவை
என்பதால், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, அவரை ஏற்றி கொண்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம், ராயபுரம் நோக்கி சென்றது.புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காவல்நிலையம் அருகே சென்ற போது, திடீரென வாகனத்தின் முன்பக்க ‘டயர்’ வெடித்து, ஆம்புலன்ஸ் நிலை தடுமாறியது. சாலை தடுப்பில் மோத முயன்ற நிலையில், ஓட்டுனர் முத்துராமலிங்கம் சாதுர்யமாக, வாகனத்தை நிறுத்தினார்.
இதில், அவரது கையில் அடிபட்டது. பெண் மருத்துவ உதவியாளர் தலையிலும் அடிபட்டது. அதிர்ஷ்டவசமாக, சிகிச்சைக்கு சென்ற நிரோஷா, பாதிப்பின்றி தப்பினார். சற்று சிக்கல் ஆகியிருந்தாலும், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும்.
தேய்ந்த ‘டயர்’
ஆம்புலன்ஸ் வாகனத்தின் ‘டயர்’ தேய்ந்து மிக மோசமான நிலையில் இருந்தும், அதை மாற்றாமல் தொடர்ந்து இயக்கியதே விபத்துக்கு காரணம் என, கூறப்படுகிறது.இது குறித்து, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில
நிர்வாகி, பால்கண்ணன் கூறுகையில், ‘‘வாகனங்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. ஊழியர்களும் உயிரிழந்து உள்ளனர். வாகனங்களை முறையாக பராமரிப்பதில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்,’’என்றார்.
108 சேவையின் முதன்மை செயல் அதிகாரி, ஸ்ரீதர் கூறுகையில்,‘‘விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது,’’ என்றார்.
அவசர கால ஆம்புலன்ஸ்
சேவை மகத்தானது தான்; அதே நேரத்தில், அது, விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிவிடக் கூடாது என்பதால், ஒட்டுமொத்த ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பராமரிப்பு என்ற அவசர சிகிச்சையை உடனே மேற்கொள்வது அத்தியாவசியம்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=786892
No comments:
Post a Comment