Tuesday 27 August 2013

மாநிலம் தழுவிய வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் மதுரையில்

கடந்த 25/08/2013 அன்று மதுரை நாராயணபுரத்தில் நமது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில அளவிலான வேலைநிறுத்த
ஆயத்த கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கூட்டதிற்கு நமது சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர்கள் திரு பால்கண்ணன் மற்றும் த சிவகுமார் அவர்களும்  தலைமை வகித்தனர்.
 மேலும் கர்நாடகா 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் நான்கு பேர்(கர்நாடகா மாநில தலைவர் ஸ்ரீதர்,துணை தலைவர் ஸ்ரீதரமூர்தி,பொதுசெயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் கிரீஸ் )   சிறப்பு அழைபாளர்களாக கலந்து கொண்டு தங்களது வேலைநிறுத்த அனுபவங்களையும் ஆலோசனைகளையும் நமக்கு வழங்கினர்.
கூட்டதில் மாவட்ட அளவிலான தொழிற்சங்க தலைவர்களையும் பொறுப்பில் உள்ள ஊழியர்களையும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் தொடர்ந்து செய்து வருவதால் அதற்கு நிரந்தர தீர்வு வேலைநிறுத்தம் தான் என்று தீர்மானிக்கப்பட்டு, வரும் 11/09/2013 அன்று சென்னையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்தை தோல்வி அடைந்தால் அதே தேதியில் வேலை நிறுத்த அறிவிப்பு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் மாநிலம் முழுமைக்கும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.       

No comments:

Post a Comment